2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகொடை - வட்டரக்க ரயில் நிலையத்துக்கு அருகே லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு மாத கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் பாட்டி மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோரே உயிழந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், குழந்தையின் தாய் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தனர்.

பனகொடவில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு செல்லும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்றும் 40 வயதான லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .