2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மடக்கிப் பிடிப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 23 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் , ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடா - 03 சவேரியார்புரம், கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் இன்று (23) காலை புகுந்த முதலையால்அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

இது தொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு  பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதிக்குச் சென்று அதிகாரிகள் சுமார் 6 அடி நீளமான குறித்த முதலையை மீட்டு, உன்னிச்சை காட்டுப் பகுதியில் உள்ள குளத்தில்  விடுவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .