2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடுப்பூசிகளை செலுத்துவதில் மக்கள் ஆர்வம்

Princiya Dixci   / 2021 ஜூலை 25 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்டது.

இப்பிராந்தியத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொவிட் தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்துக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு பொதுமக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், அரச முன்னிலை உத்தியோகத்தர்கள் போன்றோருக்கு ஏற்றப்பட்டன.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வழங்கப்பட்ட 3,500 தடுப்பூசிகளுள் முதல் நாளின் போது ,1787 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இரண்டாம் நாளில் மீதமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன், இவற்றுக்கு மேலாக மேலும் 1,200 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் கல்முனைப் பிராந்திய பணிமனைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்கு மத்திய நிலையங்களில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அக்கரைப்பற்று சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பகுதிகளில்  அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் போன்றவற்றில் இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுகின்றன.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் சுமார் 888 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வித்துறை அதிகாரிகள், கல்விசார உத்தியோகத்தர்கள் என வகைப்படுத்தப்பட்டோர் இவ்வாறு தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .