2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வர்த்தகர்களுக்கும் முன்னுரிமையில் தடுப்பூசி வழங்கவும்’

Princiya Dixci   / 2021 ஜூலை 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது, வர்த்தகர்களுக்கும் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென, சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் வர்த்தக நிலையங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென அறிவுறுத்தும் கலந்துரையாடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அல்-அமீன் ரிசார்ட் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நேற்று (11) இடம்பெற்றது.

இதன்போது, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

இதில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம். எம்.முபாரக், செயலாளர் எம்.எப்.ஏ. பாஸித், பொருளாளர் எம்.எம்.ஏ. ரஹீம் உள்ளிட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .