2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Editorial   / 2020 மே 16 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதையடுத்து, 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலயத்தில் காலி, இரத்தினபுரி மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன், குருநாகல், நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் அனர்த்தம் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X