2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’2 வாரங்களில் கொரோனா 20 கோடியை தாண்டும்’

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், டெல்டா திரிபாலேயே  தொற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிகரித்த சமூக இயக்கம், சீரற்ற பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள், சமமற்ற தடுப்பூசி வழங்கல் என்பனவும் கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்றும் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள உலக சுகாதார  ஸ்தாபனத்தின் டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸஸின் செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மாத்திரம் 4 மில்லியன் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை தீவிரமாக பரவும் டெல்டா திரிபால் ஏற்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸைத் தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 வாரங்களுக்குள் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 200 மில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .