2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

24 மணித்தியாலங்களில் 509 பேர் கைது

J.A. George   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  509 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று(21) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த முந்தைய 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  76,145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மேல் மாகாணத்தில் உள்ள 13 வீதித் தடைகளில் 2179 பேர் மற்றும் 730 வாகனங்கள் நேற்று(20) சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .