2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

4 மாகாணங்களில் அதிக மழை

Editorial   / 2020 மே 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென், மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில், குறிப்பாக ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகம் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.

கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X