2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

CEYPETCO க்கான எரிபொருள் வருகிறது

Editorial   / 2022 ஜூலை 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000  மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிக்கொண்ட கப்பல், ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது  என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜூலை 11-14 ஆம் திகதிகளுக்கு இடையிலும் 22-23 ஆம் திகதிகளுக்கு இடையிலும் பெட்ரோல் வருகின்றது.

மற்று​மொரு தொகுதி டீசல், ஜூலை 22-23 ஆம் திகதிகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .