2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆனந்தசங்கரிக்கு கொரோனா

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் சுகவீனம் அடைந்த நிலையில் நேற்று (16) அவருக்கு  மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிசிஆர் பிரிசோதனையும் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகம் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது. அதேவேளை, அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் இரு மெய் பாதுகாவலர்கள் மற்றும் சாரதி உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீ.ஆனந்தசங்கரியின் உடல்நிலையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை எனவும், அவரது வயதைக் கருத்தில் கொண்டு, தனியார் வைத்தியசாலை ஒன்றில் தங்கவைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .