2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

ஆர்ப்பாட்டத்தில் படுகாயமடைந்த ஓ.ஐ.சிக்கு சத்திரசிகிச்சை

J.A. George   / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் அருகே நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது, காயமடைந்து வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருக்கும் மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் நிலையத்தின்  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எச். ஜனகாந்த சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

 குறித்த பொலிஸ் அதிகாரியின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, மூன்று மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போராட்டத்தின் போது, ​​ஆர்ப்பாட்டக்காரர்கள்,  வீதி தடுப்பைத் தூக்கி எறிய முயன்ற நிலையில் அதனை தடுக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி இவ்வாறு காயமடைந்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை திரும்பப் பெறக் கோரி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X