2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இத்தாலியில் மகள்களை கொன்ற தாய்க்கு வலை

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் வெரோனா நகரிலுள்ள வீடொன்றில் 11 வயது மற்றும் 3 வயது மகள்மாரைக் கொலை செய்யததாகக் கூறப்படும் தாய் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது இரு மகள்களையும் கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கைப் பெண் தற்போது தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார் என இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண், நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. 

இரண்டு குழந்தைகளும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனது இலங்கைக் கணவருடன் இத்தாலி நோக்கிச் சென்றிருந்த வேளையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X