2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இதுவரை 2,423 பேருக்கு கொரோனா தொற்று

Freelancer   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 1,017பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 316,192ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றையதினம் 2,423 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 2,382 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

கொரோனா தொற்றால் 48 ஆண்களும் 26 பெண்களும் உள்ளடங்கலாக  74 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,645 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,902 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  282,770 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 28,777 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .