2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு பாராட்டு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர், பிடிஐக்கு அளித்த சிறப்பு செவ்வியில், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முக்கியப் பங்கை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் ஏராளமான நாடுகளுக்கு இந்தியா அளித்த உதவிக்காக அந்த நாட்டை பொதுநலவாய பொதுச்செயலாளர் பாராட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா இந்த ஆண்டு இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது.

இந்தநிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள அதன் தலைவர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவை,மேலும் தேவைப்படுவதாக  என்ற ஸ்கொட்லான்ட் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .