2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இனிமேல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டை கட்டாயம்

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இனிமேல் பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என்றும், அதற்கான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே முழுமையான தடுப்பூசிகளைப்பெற்றுக் கொண்டவர்களாக கணிக்கப்படுவர்.

தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாமலிருக்க எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும் பிறருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் உள்ளதால் அனைவரும் பொறுப்புடன் தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .