2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்

Freelancer   / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மழையுடனான வானிலை அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X