2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இரு மருந்துகளுக்கு இணங்கினார் சஜித்

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஷ் 

நாட்டில் முக்கிய சில மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சிலவற்றை பெற்றுத்தர உதவ வேண்டுமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க பிரதான எதிர்கட்சியிடம்  விடுத்த வேண்டுகோளை ஏற்ற எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ  இரு முக்கிய மருந்துகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (19) கருத்தொன்றை முன்வைக்கும்போதே இந்த உறுதிமொழியை எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாஸ வழங்கினார். 

அத்துடன் இந்த மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உள்ள நிர்வாக சிக்கல்களை நீக்குமாறும் பிரதமரிடம்  கோரிக்கை விடுத்தார்.

இந்த மருந்துக்களை பெற்றுக்கொள்ள தனது கட்சி உறுப்பினர்கள் நிதியுதவிகளை வழங்க தயாராக உள்ளனதாகவும், இதனால் மருந்துக்கொள்வனவுக்காக ரூபா  உள்ளபோதும் டொலர் பற்றாக்குறை பிரச்சினை இருக்கிறது.

எனவே வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் மூலம்  டொர்களை பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது என்றும்  எதிர்கட்சித்தலைவர்  சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .