2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘ஏமாற்றப்பட்டவர்கள் மீண்டும் ஐ.தே.கவுக்கு வருவார்கள்’

Nirosh   / 2021 ஜூன் 21 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துக் கொள்வாரெனத் தெரிவிக்கும் ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, சஜித்தால் ஏமாற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணைவார்களெனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கும் அவர், ஐ.தே.கவிலிருந்து சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துக்கொண்ட, 16 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் எம்முடன் இணைந்துள்ளனர். இதேபோல ஏனையோரும் எங்களுடன் இணைவது தொடர்பில் தம்முடன் கதைத்து வருகிறார்களெனவும் அவர் கூறினார்.

கட்சியொன்றை ஆரம்பிப்பதற்கு, ஐ.தே.கவின் மத்தியச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தே சஜித், ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளார். ஐ.தே.கவின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்தில் இதுபோல எந்தவிதமானத் தீர்மானங்களும் எடுக்கப்பட வில்லை என்றார்.

இதேவேளை, பலர் தங்களை சஜித் ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு சஜித்தால் ஏமாற்றப்பட்ட பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐ.தே.கவில் இணைவார்களென்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பலரும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X