Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 08 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் இருந்து மீட்கப்பட்ட 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் பணத்தை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (08) நிராகரித்தார்.
இந்த பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் குறித்த பணத்துக்கு வேறு யாரும் உரிமை கோராவிட்டாலும் பணத்தை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நீதவான் அறிவித்தார்.
இதுகுறித்து விசாரணை செய்வது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று அறிவித்த நீதவான், கோரிக்கையை நிராகரித்தார்.
இதேவேளை, குறித்த பணம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago