2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கடலலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவன்

R.Maheshwary   / 2022 ஜூலை 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தர- சீத்தகல இயற்கை நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட நிலையில், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் 22 வயதான மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன், காலி- தல்கம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 மாணவர்களைக் கொண்ட குழுவொன்று குறித்த தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த போது,  மாணவர்கள் மூவர் திடீரென அதிகரித்த கடல் அலையால் அள்ளுண்டு செல்லப்பட்டனர்.

எனினும் இதன்போது இரண்டு மாணவர்கள் காப்பாற்றப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகளும் கந்தர பொலிஸாரும் இணைந்து காணாமல் போன மாணவனைத் தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .