2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொத்தலாவல சட்டமூல எதிர்ப்பு; ஒன்லைன் ஓப்

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்தை எதிர்த்து இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், நாளை (28) ஒன்லைன் விரிவுரைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் இருந்து விலகுவர் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனங்களின் தலைவர் பேராசிரியர் ஷாம பன்னேகஹ தெரிவித்தார்.

ஒரு நாள் போராட்டமாக ஒன்லைன் விரிவுரைகளில் இருந்து விலகுவது நாளை செயற்படுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால், போராட்டம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒன்லைன் விரிவுரைகளில் இருந்து விலகுவதோடு அதற்கு இணையாக, அனைத்து கல்வி, கல்விசாரா மற்றும் மாணவர் சமூகம் ஆகியோரால் நாளை (28) எதிர்ப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பேராசிரியர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .