2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா மரணங்கள் 4,571 ஆக அதிகரிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

36 ஆண்களும் 27 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,571 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் மேலும் 1,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 313,029ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,958 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி,  280,868 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 25,973 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .