2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கருவின் மிளகாய்த்தூள் கதைக்கு ரணில் பதில்

Editorial   / 2022 ஜனவரி 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

தற்போதைய பிரதமரும், ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துரையாடிவிட்டு இவ்வாறு செய்தார்களா? இதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க இருந்தாரோ என, கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

நானும் தற்​போதைய பிரதமரும் கலந்துரையாடியதன் பின்னரே, மிளக்காய்த்தூள் வீசப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. அதுதொடர்பில் தான் வியப்படைந்தேன் என, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .