2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குருநகர் இளைஞன் படுகொலை: அறுவர் சரணடைந்தனர்

Niroshini   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

குருநகர் இளைஞன் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்றைய தினம்  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 

வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற 9 நாள்களின் பின்னர், பிரதான  சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேரும் சரணடைந்துள்ளனர். 

எனினும், பிரதான  சந்தேக நபர்களான சகோதரர்களில் ஒருவர், இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .