2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கேகாலை - அவிசாவளை வீதியில் மண்சரிவு

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை - அவிசாவளை பிரதான வீதியின் கலிகமுவ, ருவன்வெல்ல ஆகிய இரண்டு பாதைகளும் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மூடப்படும் பகுதி 2வது கிலோ மீற்றர் கல்லிலிருந்து தொடங்கும் என கூறப்படுகிறது. வாகன சாரதிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஏழு மாவட்டங்களுக்கு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை, குருநாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .