2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கைதுகள் குறையவில்லை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 27 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் பயங்கரவாதத்
தடைச் சட்டத்தால் கைது செய்யப்படுவது குறைந்தபாடில்லை என தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வரவு -செலவு திட்டத்தின் நேற்றைய (26) குழுநிலை விவாதத்தில்
கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரிசி, உரம் தொடர்பில்
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில்,
அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அநீதிகளை தடுக்க அவர்களால் முடியவில்லை என்றார்.
தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல​ர் எனத்
தெரிவித்த அவர், “ஒரே நாடு, ஒரே சட்டம்” எனும் ஜனாதிபதி செயலணியின்
செயற்பாடுகள் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென
எச்சரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .