2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’சீன தூதுவர் அழைத்ததும் சென்றது அவமானம்’

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயன்படுத்துவதற்குத் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட சேதன உரங்களை மீள் பரிசோதனைக்கு உட்படுத்துவது இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் ஆதிக்கத்தால் என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் அழைத்தவுடனேயே விவசாய அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் அவரைச் சந்திக்கச் சென்றமை இலங்கைக்கு பெரும் அவமானம் என்றும் குறிப்பிட்டார்.

விவசாயத் திணைக்களத்தின் அனைத்து பிரிவுகளாலும் இந்த உர மாதிரிகள் தொடர்பில் மூன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு, குறித்த மாதிரியில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா  இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதற்குப் பின்னரும் சர்வதேச பரிசோதனையை மேற்கொண்டு கப்பலிலுள்ள உரத் தொகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சீன தூதுவரை சந்தித்த பின்னர் தெரிவிப்பது சீன தூதுவராலயத்தின் ஆதிக்கத்துக்கு கீழ் இருப்பதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X