2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறுமிகள் இருவர் துஷ்பிரயோகம்; சிறுவர்கள் இருவர் கைது

Editorial   / 2021 ஜூலை 23 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

12 வயது மற்றும் 8 வயது சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில், 15,16 வயதுகளுடைய சிறுவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம், மாத்தளை மாவட்டத்தில் நாவுல பிரதேசத்திலே​யே இடம்பெற்றுள்ளது.

நாவுல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் யு.ஜி.பி. ரத்னாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவ்விரு சிறார்களும் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவ்விரு சிறுவர்களும் நாவுல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அத்துடன், அவ்விரு சிறுமிகளையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X