2025 ஜூலை 21, திங்கட்கிழமை

டெங்குக் காய்ச்சல் பரவும் சாத்தியம்

Editorial   / 2020 மே 21 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையினால், நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் மீண்டும் அதிகரிக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையுடன் நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் குறித்த அவதானம் மக்களிடையே குறைவடைந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 19,446 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அதிகளவான நோயாளர்களாக மேல் மாகாணத்தில் 3,361பேர் பதிவாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X