2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தடுப்பூசி தொடர்பில் தளபதியின் அறிவிப்பு

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ட்ராசெனொகா தடுப்பூசியின் முதலாம் டோஸ் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாளை முதல் இரண்டாம் டோஸ் வழங்கப்படவுள்ளது என்று, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 728,460
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, நாளை (01) விகாரமஹாதேவி பூங்காவிலும் நாளை மறுதினம் (02) கொழும்பு விகாரமஹாதேவி பூங்கா மற்றும் பத்தரமுல்ல தியத்த உயன பூங்காவிலும் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ளமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .