2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தரவரிசையில் 5ஆம் இடத்துக்கு ஆளுநர் பதவி

Freelancer   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அதிகார முன்னுரிமை பட்டியலின் 20ஆவது இடத்தில் இருந்த இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவி 5 ஆவது இடத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது..

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசர் முதல் நான்கு இடங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல் ஆகியோர் ஐந்தாம் இடத்திலும் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், ஆளுநரும் அந்த ஐந்தாம் இடத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

மாகாண இயல்புடைய விழாக்கள் மற்றும் சந்தர்ப்பங்களில், மத்திய வங்கியின் ஆளுநரை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உடனடி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த முன்னுரிமை பட்டியல் அரச விழாக்களின் போது பயன்படுத்தப்பட வேண்டும். 

இதேவேளை, மத மற்றும் திருச்சபை முக்கியஸ்தர்களுக்கு உரிய மரியாதை-முன்னுரிமை வழங்கப்படும்.

முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறாத எந்தவொரு நபர்களுக்கும் அல்லது அதிகாரிகளுக்கும் மரியாதைக்குரிய முன்னுரிமையை வழங்க தனது விருப்புரிமையை ஜனாதிபதி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .