2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

J.A. George   / 2021 ஒக்டோபர் 26 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்த பகுதியில் இன்று (26) காலை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், 45 வயதுடைய மற்றுமொரு நபர் படுகாயமடைந்துள்ளாக கூறினார்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .