2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தேர்தலுக்கு எதிரான மனுக்கள்; மூவரடங்கிய நீதியரசர்கள் இன்று ஆராய்வர்

Editorial   / 2020 மே 11 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலை  ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்காக, தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணாக உள்ளதெனத் தெரிவித்து, அந்த வர்த்தமானியை அதிகாரமற்றதாக அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் பல, பிரதமர நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், உயர் நீதிமன்றத்தில் இன்று (11) ஆராயப்படவுள்ளன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எஸ்.துரைராஜா, முர்து பெர்ணான்டோ ஆகியோராலேயே, இந்த மனுக்கள் இன்று ஆராயப்படவுள்ளன.

சட்டத்தரணி சரித்த குணரத்ன, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவபடுத்தியும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட 10க்கும்  மேற்பட்டவர்களால், இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X