2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நல்லூரான் வீதியில் பொலிஸார் குவிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த் 

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம், இன்றைய தினம், நல்லூர் கோவில் உள்வீதியில் இடம்பெற்ற நிலையில், கோவில் சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

நல்லூர் கோவில் தேர் உற்சவத்தை தரிசிக்க  அடியவர்கள் கோவிலுக்கு வருவதை தடுக்கும் முகமாக,  நல்லூர் கோவில் சூழலில்  பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவில் உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு, கோவிலுக்கு முன்பாக பொலிஸாரின் பஸ் ஒன்று, வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ளதோடு,  நல்லூர் கோவில் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .