2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாளை முதல் கடும் மழை பெய்யும்

Freelancer   / 2023 ஜனவரி 29 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு  வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைவதால், நாடு முழுவதும் நாளை (30) முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஜனவரி 31 ஆம் திகதி மற்றும் பெப்ரவரி 01ஆம் திகதிகளில் நாடு முழுவதும் பல இடங்களில் 150 மில்லி மீற்றர் அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் திணைக்களம் தெரிவிக்கிறது.

நாட்டில்  பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .