2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

படையினரையும் பொதுமக்களையும் மோதவிடுகிறது அரசாங்கம்

Freelancer   / 2022 ஜூலை 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு தரப்பினரும் பொதுமக்களும் சண்டையிட்டுக் கொள்வதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி, அரசாங்கம் வேண்டுமென்றே பாதுகாப்பு தரப்பினருக்கும் பொது மக்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனைவரும் ஆடையணிந்து இருப்பதாக எண்ணிக் கொண்டாலும் அவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே இருக்கிறார்கள். விவசாயிகள் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைவரும் பிச்சைக்காரர்களாகியுள்ளனர்.நாட்டிலுள்ள அனைத்து மீனவர்களுக்கும் மண்ணெண்ணையை வழங்குவதற்கான எந்த விதமான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக தெரியவில்லை. 1500 ரூபாய்க்கும் அதிகமான விலை கொடுத்தே மண்ணெணெய்யை பெற்றுக்கொள்ளும் நிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அடித்துக் கொள்கிறார்கள். இந்த மோதல் நிலையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறது. அதேபோல்  எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் முயன்று வருகிறது எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X