2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பதிவு திருமணத்தில் கலந்துகொண்ட பெண்ணுக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 04 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில், அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமணம் நிகழ்வில் கலந்துகொண்ட பெண்ணொருவருக்கு, கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை - பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண்ணே, இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு, நேற்றைய தினம் (03), திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர், ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில், தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவருடன் தொடர்பை பேணியவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில், அண்மையில் பதிவு திருமண நிகழ்வொன்றி நடைபெற்றதாகவும், அதில், குறித்த பெண்ணும் கலந்துகொண்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது..

இதையடுத்து, பதிவு திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .