Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
J.A. George / 2022 ஜூலை 04 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மே மாதம் 30ஆம் திகதி, கொழும்பு - பெஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயரிழந்துள்ளார்.
பெம்முல்லயில் இன்று(04) அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போதே, அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த 41 வயதுடைய நபர், பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கூட்டாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்ய முற்பட்ட போது, சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், மோட்டார் சைக்கிளை பொலிஸார் மடக்கி பிடித்தனர்.
இதன்போது, சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, T-56 துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
9 hours ago