2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாலியல் நடவடிக்கைக்காக சிறுமி விற்பனை: 28 பேர் கைது

Editorial   / 2021 ஜூலை 04 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸையில் வைத்து, 15 வயதான சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனைச் செய்தனர், பிரசாரம் செய்தனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டுகளின் கீழ், இதுவரையில், 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், மிஹிந்தலை பிரதேச சபையின் உப-தவிசாளர், பிக்கு, கோடீஸ்வர வர்த்தகர், கப்பல் கெப்டன், ஓட்டோ சாரதி உள்ளிட்டவர்களும் அடங்குகின்றனர்.

சிலரிடம், சுமார் 3 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசி அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார். அதில், சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய், அச்சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

இதேவேளை, அவிசாவளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகருக்கு அச்சிறுமியை 21 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .