Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து நீரைப் பெறும் திட்டத்தைச் சாத்தியப்படுத்தியமைக்காக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு யாழ் பல்கலைக்கழக பேரவை நன்றி தெரிவித்துள்ளது.
துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா தலைமையில் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தின்போதே, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கு இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக 2013ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்துக்கு அறிவியல்நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியைப் பெற்றுத்தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பின்னர், பல்கலைக்கழக வளாகத்துக்கு நீரைப் பெற்றுக்கொடுப்பதற்காக, பல்கலைக்கழகத்துக்குப் பின்புறமாக இருக்கும் புலிக்குளத்தைப் புனரமைத்து, அங்கிருந்து வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவரும் திட்டத்தை
சாத்தியப்படுத்த ஏற்பாடு செய்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago