2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பேரழிவை நோக்கி செல்கிறது நாடு

Freelancer   / 2022 ஜனவரி 16 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்துக்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் தெரிவித்ததாவது,

பொதுமக்கள் சுகாதார விதிகளையும் முகக்கவசம் அணிவதையும் புறக்கணிப்பதால் இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பெரும் பேரழிவை நோக்கிச் செல்வதாகவும் அவர் எச்சரித்தார்.

அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதை விட தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தொற்றுநோய் கடந்துவிட்டது என்ற அனுமானத்தின் கீழ் பூஸ்டர் டோஸைப் பெறுவதற்கான உத்தரவுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் வலியுறுத்தினார்.

அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நிலைநிறுத்துவதில் அரசாங்கமும் பொதுமக்களும் ஆர்வத்தை இழந்துள்ளதாக தெரிவித்தார்.

எனவே, கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் ஒரே கடமையாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .