2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

போதனைகளை நடத்திய இருவர் ஒலுவிலில் கைது

J.A. George   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடிப்படைவாத போதனைகளை நடத்திய குற்றச்சாட்டில், பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் (TID) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 மற்றும் 39 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் ஒலுவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு போதனை நடத்திய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .