2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

`மக்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி`

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 02 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாரிய அளவிலான இடங்களை அரசாங்கத்துக்கு நெருங்கியவர்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தான் அமைச்சராக இருந்தபோது, மக்களுக்கு 20 பேர்ச் காணியை வழங்கி அதில் அவர்கள் வீடுகளை
நிர்மாணித்துக்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தேன்
என்றார்.

எனினும் தற்போதைய அரசாங்கம் இலங்கை மக்களின் இடங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றது, மக்களை இந்த
இடங்களில் இருந்து வெளியேற்றி யாருக்கு இடங்களை வழங்கப்போகிறீர்கள்
எனவும் அவர் இதன்போது வினவினார்.

அரசாங்கத்துக்கு நெருங்கிய நண்பர்களுக்கே இவ்வாறு பாரிய அளவிலான
இடங்களை அரசாங்கம் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .