Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
நாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக
தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,
இந்த மக்கள் கிளர்ச்சி ஆட்சி மாற்றத்தில் மாத்திரமே முடியுமெனவும்
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு
தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போதைய
அரசாங்கத்தின் தூண்களாக இருக்க, தற்போது அவர்கள் ஆட்டம் காண்கிறார்கள்
எனவும் கூறினார்.
ஆட்சிபீடம் மேற்றிய பெரும்பான்மை இன மக்களே தற்போதைய அரசாங்கத்தை
திட்டித்தீர்க்கிறார்கள். இவ்வாறான நிலையில் பேரினவாதிகளின் ஆதரவைத்
தக்க வைக்க, நாட்டில் இல்லாத பயங்கரவாத, இனவாத, மொழிப்
பிரச்சினைகளை காட்டி அமைதியாக வாழும் இந்நாட்டு மக்களிடையே
பிளவுகளை ஏற்படுத்த முயல்கிறார்கள் எனவும் கூறினார்.
எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா தனிச் சிங்கள சட்டத்தை
கொண்டுவருவதாகக் கூறி நாட்டில் பற்ற வைத்த தீ கடந்த 6 தசாப்தங்களாக
கொழுந்துவிட்டு எரிகிறது. இப்போது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்கிற புதிய தீயை
கொளுத்தியிருக்கிறீர்கள். இது எத்தனை தசாப்தங்களுக்கு பற்றி
எரியப்போகிறதோ என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago