2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மண்ணெண்ணெய் விலையும் அதிகரிக்கும்

Editorial   / 2022 ஜூலை 05 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணெண்ணெய் விலை, வியாழக்கிழமை (07) கட்டாயமாக அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் இன்று (05) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மண்ணெண்ணெய் தற்​போதைக்கு 87 ரூபாய்க்கே விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு 400 ரூபாய் செலவாகிறது என்றார்.

எரிபொருட்களை முறையாக விநியோகித்தால் அதனால் ஏற்படும் நட்டம் கையை கடிக்காது என்றார்.

இதுவரையிலும் குறைந்த விலைக்கே, கூட்டுத்தாபனம் எரிபொருளை விற்பனை செய்துவந்தது. தற்போது அதனை செய்யமுடியாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .