2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீண்டும் ஏமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்

Freelancer   / 2023 ஜனவரி 29 , பி.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு முறை அலைகளாலும் பொய்களாலும் ஏமாந்து இந்நாடு வங்குரோத்தானது எனவும், மீண்டும் ஏமாற்று காட்டி நாட்டை வங்குரோத்து செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கையை சிலர் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மீண்டும் ஓர் ஏமாற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்று தெரிவித்தார்.

அம்பலாந்தோட்டையில் சனிக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு டொலர்கள் இன்றியமையாதது எனவும், அதற்கான விசேட திட்டமொன்று தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

நிதியில்லை, வேலை செய்ய முடியாது, நாடு வங்குரோத்தாகி விட்டது என்று அரசாங்கம் சாக்குப்போக்கு தேடும் வேளையில், ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய எதிர்க்கட்சியின் வகிபாகத்திலிருந்து விடுபட்டு நாட்டுக்கு பெறுமானத்தைச் சேர்த்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிலர் 74 வருட வரலாற்றை குறை கூறி குற்றம் சுமத்தி வருகின்ற போதிலும், அவ்வாறு கூறும் தரப்பினரும் இந்நாட்டு அரசாங்கங்களில் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் கடமையாற்றியுள்ளதை எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .