2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் ஒருவர் உயிரிழப்பு - 10 பேர் பாதிப்பு

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ். மாவட்டத்தில் புதன்கிழமை வீசிய காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர்  என்.சூரியராஜ் தெரிவித்தார்.

யாழில் வீசிய கடும் காற்றினால் கோப்பாய், நல்லூர், காரைநகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

கோப்பாய் J 286 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர், நல்லூர் J 97 கிராம சேவையாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், காரைநகர் J 41 கிராம சேவையாளர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் என 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .