2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ரஞ்சனுக்காக காத்திருக்கும் பண்டோரா ஆவண இறுதி அறிக்கை

Freelancer   / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) இறுதி அறிக்கை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கமைய, சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அறிக்கை இறுதி செய்யப்படும் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பண்டோரா ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், ரஞ்சன் ராமநாயக்கவிடம் சட்டத்தரணிகள் மூலமாக வாக்குமூலமொன்றை வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கால்டெரா தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பண்டோரா ஆவணங்களில் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையர்களான நிரூபமா ராஜபக்ச மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோர் தொடர்பில் சாட்சியங்களை வழங்க ரஞ்சன் ராமநாயக்க தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X