2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் கைக்குண்டு; மற்றொரு நபர் கைது

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் நேற்று(24)  கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 22 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டதாகவும், இவரை திருகோணமலையில் வைத்து கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

மேலும், பிரதான சந்தேகநபரிடமிருந்து பெறப்பட்ட தகவலையடுத்தே இவர் கைதாகி உள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .