2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’

Freelancer   / 2022 மே 20 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

பாராளுமன்ற கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கூறும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சுப் பதவிகளுக்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

ஆளும், எதிர்க்கட்சியாக இருந்துகொண்டே ஒன்றாக செயற்படுவோம். ஆனால் எதிர்க்கட்சியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போடும் விளையாட்டுக்களை ஜனாதிபதியும், பிரதமரும் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

இலங்கை வங்குரோத்த நிலைக்கு தள்ளப்பட்ட நாடென்ற பெயரை பெற்றுவிட்டது.  கடந்த வாரத்தில் முள்ளிவாய்க்கலில் நினைகூரல் இடம்பெற்றபோது இராணுவத்தினர் அதனைத் தடுத்தார்கள். தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவே அனைத்து மக்களும் ஒன்றுகூடி நினைக்கூருகிறார்கள். 

நேற்று காலிமுகத்திடலில் அனைவரும் ஒன்றிணைந்து புலிகள், இராணுவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்தார்கள். இதுவே மாற்றம் எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X